Tuesday, August 13, 2019

திருப்புகழ் 277 நிலையாத சமுத்திர (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா

சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருச்செந்தூர் முருகா போற்றி
திருத்தணிகைமலை முருகா போற்றி


திருப்புகழ் 277 நிலையாத சமுத்திர  (திருத்தணிகை)

       பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
     தனதான தனத்தன தான ...... தனதான

......... பாடல் .........

நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி
     நிசமானது எனப்பல பேசி ...... யதனூடே
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
     நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி பவநோயின் அலைப்பல வேகி

     சலமான பயித்திய மாகி ...... தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரையறுத்து உனை யோதி
     தலைமீதில் பிழைத்திடவே நின்  ...... அருள்தாராய்

கலியாண சுபுத்திரனாக குறமாது தனக்கு விநோத
     கவினாரு புயத்தில் உலாவி ...... விளையாடிக்
களிகூருமுனைத் துணைதேடும் அடியேனை சுகப்படவே வை
     கடனாகும் இதுக்கனமாகு ...... முருகோனே


பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
     படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோகமெனப் பரிவேறு
     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.



......... சொல் விளக்கம் .........

நிலையாத சமுத்திரமான ... அகலம், ஆழம் இவ்வளவு என்று

காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற


சமுசார துறைக்கணின் மூழ்கி ... சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே

மூழ்கி,


நிசமானதெனப் பல பேசி ... மெய் போன்ற பல பொய்களைப் பேசி,



அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி ... அந்த சம்சாரக்

கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி,


பெரியோர்களிடைக் கரவாகி ... பெரியோர்களின் கூட்டத்தில்

சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி,


நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல் ... நல்ல

நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல்,


தலையான வுடற்பிணி யூறி ... உடலில் முதன்மையான நோய்கள்

வந்து தாக்கவும்,


பவநோயின் அலைப்பல வேகி ... இந்த சம்சார சாகரத்தில் பிறவி

நோய் என்னும் பல அலைகள் வீசவும்,


சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் ... கோபம்

கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல்,


பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து ... பிறவியின் மூல காரணத்தை

ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து,


உனையோதி தலைமீதில் பிழைத்திடவே ... உன் புகழ் ஓதி

இவ்வுலகில் உய்யுமாறு


நினருள்தாராய் ... உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக.



கலியாண சுபுத்திரனாக ... மேன்மை தங்கிய கல்யாண

மாப்பிள்ளையாகவே


குறமாது தனக்கு விநோத ... குறக் குல வள்ளி தேவியிடத்தில்

என்றும் விளங்கி உல்லாசமாக,


கவினாரு புயத்தில் உலாவி விளையாடி ... அழகு நிறைந்த

அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து


களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை ... மகிழும்

உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை


சுகப்பட வேவை கடனாகும் ... இன்பம் அடையும்படியாகவே

வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும்.


இதுக்கன மாகு முருகோனே ... அவ்வாறு என்னை அருளினால்

அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே.


பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ்

கூறி ... பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன்
திருப்புகழைப் பாடி


படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே ... இவ்வுலகிலே

உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து
வாழும்படியாக அருளும் செவ்வேளே,


சிவலோக மெனப்பரி வேறு ... இதுவே பூலோகத்தில் உள்ள

சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க


பதியான திருத்தணி மேவு ... திருத்தலமாகிய

திருத்தணிகையில் வாழ்கின்ற,


பவரோக வயித்திய நாத பெருமாளே. ... பிறவிப் பெரு

நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே. 

நன்றி. கௌமாரம். காம். http://www.kaumaram.com/thiru/nnt0277_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம். 


No comments:

Post a Comment