ஓம் முருகன் துணை
ஒவ்வொரு
சிந்தனைக்கும் செயலுக்கும் நிகழ்வுக்கும் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று கீழ்நிலை. மற்றது
மேல் நிலை. நாம் மையத்தில் நின்று பார்க்கின்றோம். நம் பார்வை கீழேயும் செல்லலாம்.
மேலேயும் செல்லலாம். எங்கும் செல்லாமல் கண்மூடிக்கொண்டும் இருக்கலாம். கண்மூடிக்கொண்டு
இருப்பது ஒருசராசரிதனம். கீழே போவது அறியாமையின் அல்லது முயலாமையின் வெளிப்பாடு. மேலே
செல்வதுதான் பகுத்தறிவு. ஊக்கத்தின் மேம்பாடு. வாழ்வின் உயர்வு.
கீழ்நிலை
எது? மேல் நிலை எது? என்று இருபார்வையையும் செலுத்தி, மேல்நிலைக்கு உயர்வதுதான் மானிடராக
பிறந்தன் ஆனந்தத்தைக் கொடுக்கும்.
மகாபாரதத்தில்
ஒரு கதை. வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன் என்ற புகழ் உலகில் பரவுகின்றது. குருதுரோணர்
அர்ஜுனனுக்கு மட்டும் அதிகமாக ரகசியமாக சொல்லித்தருகிறார் என்ற கீழ்நிலைப்பார்வை துரியோதனனுக்கு
வந்தது. அந்தகீழ்நிலைப்பார்வையால் ஏற்பட்ட முனுமுனுப்பு மன்னன் திருதராஷ்டிரன் வரை சென்றுவிட்டது. சீடர்கள் இடம் பாரபட்சம் எதுவும் தனக்கு இல்லை என்று
விளக்கிக்காட்ட துரோணர் முடிவு செய்தார்.
ஒரு
நாளைகாலை சீடர்கள் உடன் கங்கைக்கு துரோணர் குளிக்க சென்றார்.பாழி வழி சென்றதும் அர்ஜுனனை
அழைத்து இன்று எண்ணெய் தேய்த்துக்கொள்ளவேண்டும், எண்ணெய் எடுத்துவர மறந்துவிட்டேன்.
நீ சென்று குருமாதாவிடம் எண்ணெய் வாங்கி வா” என்று சொல்லி விட்டு “மாதாவிடமிருந்து
எண்ணெயை வாங்கியபின் அதை கீழே எங்கும் வைக்கக்கூடாது என் கையில் தான் கொண்டுவந்து வைக்கவேண்டும்”
என்ற நிபந்தனையும் விதிக்கிறார்.
“அப்படியே
செய்கின்றேன் குருவே” என்று வணங்கி குருவின் குடிலை நோக்கி நடக்கிறான் அர்ஜுனன்.
துரோணர்
பாண்டவர் நால்வருடனும், கௌரவர் நூறுபேருடனும் கங்கை நோக்கி நடக்கிறார். வழியின் பக்கத்தில்
கொஞ்சம் தூரத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. துரோணர் திரும்பி அந்த ஆலமரத்தை நோக்கி
மாணவர்கள் உடன் நடக்கிறார். அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து மண்ணில் ஒரு யந்திரம்
வரைந்து அதற்குள் மந்திரத்தை எழுதி மாணவர்களுக்கு
விளக்குகின்றார்.
“இந்த
யந்திரத்தில் இருக்கும் மந்திரத்தை உச்சரித்து வில்தொடுத்து அம்புவிடவேண்டும். வில்லிலிருந்து
கிளம்பும் ஒரு அம்பு பல அம்புகளாக பிரிந்து இந்த மரத்தில் உள்ள இலைகள் அனைத்திலும்
துளையிடும்” என்றார்.
துரோணர்
துரியோதனை அழைத்து அந்த மந்திரத்தை உச்சரித்து
அம்பு விடசொன்னார். துரியோதனன் அம்பு விட்டான். அவனுடைய ஒரு அம்பு பல அம்புகளாக பிரிந்து
ஆலமரத்தில் இருந்த அனைத்து இலைகளிலும் துளையிட்டு அவனிடம் திரும்பி வந்தது.
இன்றைய
பாடம் இதுதான் என்று கூறிய துரோணர் குளிக்க கங்கையை நோக்கி நடந்தார்.
குருமாதாவிடம்
இருந்து எண்ணெய் வாங்கிய அர்ஜுனன் கங்கையை நோக்கி நடக்கிறான். வழியில் குருதேவரும் மாணவர்களும் ஆலமரத்தை நோக்கி நடந்த காலடித்தடத்தைப்பார்த்து அவனும் ஆலமரத்தடி செல்கிறான். ஆலமரத்தடியில் ஒரு யந்திரமும் அதில் மந்திரமும் உள்ளது. அர்ஜுனன் மேலே பார்க்கிறான் ஆலமரத்தின் அனைத்து இலைகளிலும் துளைவிழுந்து உள்ளது. குருதேவர் இன்று நடத்திய பாடம் இதுதான் என்று அர்ஜுனனுக்கு புரிந்துவிட்டது.
வலது கையில் எண்ணெய் கிண்ணம். இடது கையில் வில். தோளில் அம்பராதுணி. “எண்ணையை எங்கும் கீழே வைக்கக்கூடாது” என்று குருதேவர் சொன்ன நிபந்தனை சிந்தனையில் ஒலிக்கிறது.
இன்றைய பாடத்தை எப்படிவிடமுடியும். அதுவும் மிகமிக முக்கிய அபூர்வமான பாடம்.
அர்ஜுனன் யந்திரத்தைப்பார்த்தான். மந்திரத்தை மனம்செய்தான். பாடம் பழகியது. எண்ணெய் கிண்ணத்தை ஒரு அம்பின் நுணியில் வைத்து சிந்தாமல் மேலே அனுப்பினான். அது திரும்புவதற்குள் மற்றொரு அம்பை எடுத்து மந்திரத்தை ஜெபித்து மேலே விட்டான். ஒரு அம்பு பல அம்பாக பிரிந்து ஆலமரத்தின் அத்தனை இலைகளையும் துளையிட்டு திரும்பி வந்தது. எண்ணெய்யும் திரும்பி வந்தது. எண்ணெய்யை பிடித்துக்கொண்டு பாடம் புரிந்துவிட்ட மகிழ்ச்சியில் குருவை தேடிச்சென்று எண்ணெய்யை கொடுத்தான்.
எண்ணெய்யை வாங்கிய குருதுரோணர் “எண்ணெய்யை எங்கும் வைக்கவில்லை அல்லவா?” என்று அவன் கண்களைப்பார்த்தாார். அவர் கண்கள் சிரித்தன. இவன் கண்கள் மகிழ்ச்சியில் வணங்கின. மற்ற சீடர்கள் குளிக்க தயாராகிக்கொண்டு இருந்தனர்.
துரோணரும் சீடர்களும் குளித்து முடித்ததும். மீண்டும் குடிலை நோக்கி நடக்கதொடங்கினார்கள். அந்த ஆலமரம் வந்ததும் குருதேவர் “வாருங்கள் அந்த ஆலமரத்திற்கு சென்று பார்த்துவிட்டு செல்வோம்” என்று சீடர்களை அழைத்துக்கொண்டு ஆலமரத்தடிக்கு சென்றார். மரத்தில் உள்ள இலைகள் அனைத்திலும் இரண்டு துளைகள் இருந்தன. சீடர்கள் ஆச்சரியத்தில் வாய் அடைத்து நின்றனர்.
“யார் இந்த இரண்டாவது துளையை போட்டது” என்றார் குருதேவர் துரோணர்.
“அடியேன்தான் குருதேவா” என்று அர்ஜுனன் வந்து வணங்கினான்.
துரோணர் துரியோதனை பார்த்தார். அவன் தலைகுனிந்துக்கொண்டான். குருதேவர் துரோணர் வாஞ்சையுடன் அர்ஜுனன் தலையை கோதினார்.
இந்த கதையில் அர்ஜுனன் இடத்தில் துரியோதன் எண்ணெய் வாங்க சென்று இருந்தால் தனக்கு குருதேவர் பாடத்தை மறைத்துவிட்டார் என்று பொறாமைக்கொண்டு கீழான சிந்தனையில் நின்று இருப்பான். ஆனால் அர்ஜுனன் தரையில் இருந்த யந்திரமும் மந்திரமும் தனக்கான பாடம் என்பதால்தான் குருதுரோணர் அதை அழிக்காமல் விட்டுவைத்து உள்ளார் என்று மேலான எண்ணத்தில் தன்னைநிறுத்தி பாடத்தை கற்றுக்கொண்டு வென்றான்.
நாம் எந்த சிந்தனைக்கும் செயலுக்கும் நிகழ்வுக்கும் இடையில் மையத்தில் பூஜியத்தில் நிற்கின்றோம். அதனால் உயர்வை நோக்கி அல்லது கீழ்மைநோக்கி நாம் நகரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே ஒவ்வொரு நகர்வையும் உயர்ந்ததை நோக்கி வைக்கும் கூரறிவை வளர்த்துக்கொள்வது மனதை விசாலமாக்கும் சிந்தனையை மலரச்செய்யும் வாழ்க்கையை பொன்மயமாக்கும்.
சிந்தனையை செயலை நிகழ்வுகளை மேலானதாக்க, சிந்தனை செயலில் மேலானவர்களின் சொற்களை வாழ்க்கை முறையை நூல்களை பயில்பதன்மூலமும் அதனை வாழ்க்கையில் அனுஷ்டிப்பதன்மூலமும் நாம் அடையமுடியும்.
வாழ்க வளமுடன். வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்
எண்ணெய்யை வாங்கிய குருதுரோணர் “எண்ணெய்யை எங்கும் வைக்கவில்லை அல்லவா?” என்று அவன் கண்களைப்பார்த்தாார். அவர் கண்கள் சிரித்தன. இவன் கண்கள் மகிழ்ச்சியில் வணங்கின. மற்ற சீடர்கள் குளிக்க தயாராகிக்கொண்டு இருந்தனர்.
துரோணரும் சீடர்களும் குளித்து முடித்ததும். மீண்டும் குடிலை நோக்கி நடக்கதொடங்கினார்கள். அந்த ஆலமரம் வந்ததும் குருதேவர் “வாருங்கள் அந்த ஆலமரத்திற்கு சென்று பார்த்துவிட்டு செல்வோம்” என்று சீடர்களை அழைத்துக்கொண்டு ஆலமரத்தடிக்கு சென்றார். மரத்தில் உள்ள இலைகள் அனைத்திலும் இரண்டு துளைகள் இருந்தன. சீடர்கள் ஆச்சரியத்தில் வாய் அடைத்து நின்றனர்.
“யார் இந்த இரண்டாவது துளையை போட்டது” என்றார் குருதேவர் துரோணர்.
“அடியேன்தான் குருதேவா” என்று அர்ஜுனன் வந்து வணங்கினான்.
துரோணர் துரியோதனை பார்த்தார். அவன் தலைகுனிந்துக்கொண்டான். குருதேவர் துரோணர் வாஞ்சையுடன் அர்ஜுனன் தலையை கோதினார்.
இந்த கதையில் அர்ஜுனன் இடத்தில் துரியோதன் எண்ணெய் வாங்க சென்று இருந்தால் தனக்கு குருதேவர் பாடத்தை மறைத்துவிட்டார் என்று பொறாமைக்கொண்டு கீழான சிந்தனையில் நின்று இருப்பான். ஆனால் அர்ஜுனன் தரையில் இருந்த யந்திரமும் மந்திரமும் தனக்கான பாடம் என்பதால்தான் குருதுரோணர் அதை அழிக்காமல் விட்டுவைத்து உள்ளார் என்று மேலான எண்ணத்தில் தன்னைநிறுத்தி பாடத்தை கற்றுக்கொண்டு வென்றான்.
நாம் எந்த சிந்தனைக்கும் செயலுக்கும் நிகழ்வுக்கும் இடையில் மையத்தில் பூஜியத்தில் நிற்கின்றோம். அதனால் உயர்வை நோக்கி அல்லது கீழ்மைநோக்கி நாம் நகரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே ஒவ்வொரு நகர்வையும் உயர்ந்ததை நோக்கி வைக்கும் கூரறிவை வளர்த்துக்கொள்வது மனதை விசாலமாக்கும் சிந்தனையை மலரச்செய்யும் வாழ்க்கையை பொன்மயமாக்கும்.
சிந்தனையை செயலை நிகழ்வுகளை மேலானதாக்க, சிந்தனை செயலில் மேலானவர்களின் சொற்களை வாழ்க்கை முறையை நூல்களை பயில்பதன்மூலமும் அதனை வாழ்க்கையில் அனுஷ்டிப்பதன்மூலமும் நாம் அடையமுடியும்.
வாழ்க வளமுடன். வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்
No comments:
Post a Comment