ஓம் முருகன் துணை
காதலி என்பதும் பெருநிலை. அரசியென்பதும் பெருநிலைதான், இரண்டும் அன்னையாகி உலகில் வாழ்வாங்கு வாழும் உயர்நிலைதான்.
அன்னை பார்வதி
காதலி, அன்னை சிவகாமி காதலி, அன்னை சீதை காதலி, அன்னை சந்திரவதி காதலி, அன்னை சாவித்திரி
காதலி, அன்னை தமயந்தி காதலி.
அன்னை மீனாட்சி
காதலி மட்டும் இல்லை, உலகாளும் அருளரசி. அன்னை தேவயானி காதலியாக இருந்து, உலகாண்டா
ராஜமாதா. அன்னை திரௌபதி பெரும்காதலி, உலகாளும் குலதெய்வம்.
காதலியாக இருப்பவரும்,
காதலியாகவும் ஆளுமையுடை அரசியாகி அன்னையாகவும் இருப்பவர்களும் இருபெரும் உயர்நிலைகள். ஒன்று அகமாகி வளர்வது. மற்றொன்று புறமாகி வளர்வது. இரண்டு வளர்ச்சியும் உயர்வானதே.
காதலியாக இருப்பவர்கள்
உலக உள்ளங்களில் மென்மையானவர்களாக எளியவர்களாக தெரிகின்றார்கள். ஆனால் அவர்கள் அகஆளுமைக்கொண்டவர்களாக
இருக்கிறார்கள். அவர்கள் ஊற்றுக்கண்போல அவர்களிடம் இருந்தே அவர்கள் சார்ந்து உள்ளவர்கள்
சக்தியை ஆளுமையை மேன்மையை பெருகின்றார்கள். அவர்கள் ஒரு மையம். பரவுவதில்லை. ஆனால்
பரவுவது எல்லாம் அவர்களிடம் இருந்தே.
காதலியாகி ஆளுமை
அரசியாகி அன்னையாகவும் உள்ளவர்கள் புறசக்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்கள் ஆற்றல்
முழுவதை புறத்தில் விரித்து வைத்து புறத்தை சக்தி உடையதாக செய்கிறார்கள். அவர்கள் அகத்தை
விரித்துக்கொண்டே செல்கின்றார்கள். அகம் ஒன்று இருப்பதாககூட அவர்கள் அறிவதில்லை. அவர்கள்
அறிவதெல்லம் புறம்உலகம். புறஉலகமே அவர்களை கொண்டு வளர்ந்து, புறஉலகம் அவர்களின் வடிவங்களாக
ஆகிவிடுகின்றன.
காதலியாக இருப்பவர்கள் அரசிகளை பெரியவர்கள் என்று நினைப்பது உண்டு. அரசிகளாக இருப்பவர்கள் காதலிகளை பெரியவர்களாக நினைப்பது உண்டு. தன்னைத்தான் திரும்பிப்பார்ப்பவர்களே தன்னின் பெருமையை உணரமுடியும். அதுவே ஆனந்தம் தரும் வளர்ச்சி என்பது விளங்கும்.
காதலியாக இருப்பவர்கள்
உள்ளத்தை இனிக்கவைத்து கண்ணில் ஆனந்தமாக நிறைகின்றார்கள். காதலியாக மட்டும் இல்லாமல்
அரசியாகவும் ஆகி அன்னையாகவும் இருப்பவர்கள்
கண்ணில் புதுமையாக நிறைந்து இதயத்தில் தீபமாக ஒளிர்கின்றார்கள்.
பெண்கள் இரண்டு
கிளைகளாக வளரமுடியும். தன்னை காதலியாக மட்டும் வளர்த்துக்கொள்வது. மற்றொன்று காதலியாக
இருந்து ஆளுமையுடைய அரசியாகி லோக அன்னையாகவும் வளர்த்துக்கொள்வது.
அன்பானவர்களே! உங்கள்
இயல்பு என்ன என்பதை கவனித்து உங்களை எதுவாக வளர்த்துக்கொள்ளமுடியுமோ அதாக வளர்த்துக்கொள்ளுங்கள்.
அன்னை சிவகாமியாக இருப்பது முடியா நடனம் கண்டு ஆடல் கண்டு முடிவிலியாக நிற்பது. அன்னை மீனாட்சியாக இருப்பது வளராட்சி செய்து வளர்ந்தோங்கி நிற்பது. இரண்டுமே வாழ்க்கையின் ஆடல்தான்.
வாழ்க வளமுடன்.
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.
No comments:
Post a Comment