Monday, January 6, 2020

அ.முத்துலிங்கம் கட்டுரை வாசிப்பு அனுபவம்-நிஜமான ஆனந்தம்




ஓம் முருகன் துணை

 நிஜமான ஆனந்தம்.

கட்டுரை வாசிக்க அன்றன்றைக்கு உரிய அப்பம்-அ.முத்துலிங்கம்



’சின்ன விஷயங்களின்  மனிதன்’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலை எழுத்தாளர் வண்ணதாசன் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களுக்கு 2014 ஆண்டு சமர்ப்பணம் செய்து உள்ளார்.

இதற்கு முன்பு வண்ணதாசனும், அ.முத்துலிங்கமும் கடிததொடர்போ, தொலைபேசி தொடர்போ வைத்துக்கொண்டது இல்லை. நேரிலும் சந்தித்தது இல்லை.

அந்தநூலை அ.முத்துலிங்கம் அதுவரை படித்தது இல்லை. அவரும் இவருக்கு சொல்லவில்லை. அனுப்பவில்லை.

2018  ஆண்டு கனடா தமிழ் சங்கம் வண்ணதாசனுக்கு இயல்விருது வழங்கும் போது அ.முத்துலிங்கம் வண்ணதாசனை வரவேற்று உபசரிக்கின்றார். விடைபெறும் நாளில்தான் வண்ணதாசன் அந்த நூலை முத்துலிங்கத்திற்கு கொடுக்கிறார். அவர் நின்று கொண்டே படிக்கிறார்.

‘புனைவுகளாலும், அதைவிடக் கூடுதலாகத் தன்னுடைய அபுனைவுகளாலும் நவீன தமிழுக்குத் தொடர்ந்த பங்களிப்பை அளித்துவருகிற திரு அ.முத்துலிங்கம் அவர்களின் கையில் இந்த தொகுப்பைக் கனிவுடன் சேர்க்கிறேன்.’ 

இதில் எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால்?. கையில் கனிவுடன் சேர்க்கிறேன் என்ற அந்த வார்த்தைகள் நிஜமானதால் ஏற்படும் ஆனந்தம்தான் ஆச்சர்யம்.

2014லிருந்து 2018ம்வருடம் வரை காத்திருந்து அந்த எழுத்தாளன் வார்த்தைகள் நிஜமானது நிஜமான ஆனந்தம்.

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்

No comments:

Post a Comment