ஓம் முருகன் துணை
அக உலகம் புற உலகம் என்பது தனது உண்மையை எண்ணங்கள் என்ற தோலுக்குள் மறைத்து வைத்துள்ள கனியாகும். அந்த தோலை மட்டும் நாம் விலக்க தெரிந்துக்கொண்டாள், உண்மையை கண்டு சுவைக்கலாம்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் சொல்வதுபோல ஓடும் சதையும் சேர்ந்ததுதான் வில்வபழத்தின் எடை.
எண்ணங்களும் மெய்மையும் சேர்ந்ததுதான் உலகும் வாழ்வும்.
சத்குரு ஜக்கிவாசுதேவ் சொல்லும் இந்த கதையில் நான்கு எறும்பும் யானையும் கதை அகங்காரத்தின் தன்மையை அழகாக விளக்குகிறது.
சத்குருவின் குரலில் இந்த கதையை கேட்பது சுகானுபவம். நன்றி சத்குரு.
வாழ்க்கயைின் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து கவனித்தால் வாழ்க்கை என்பது நமது எண்ணங்கள்தான். நமது எண்ணங்களை நாம் ஒழுங்குபடுத்த ஒழுங்குப்படுத்த வாழ்க்கை ஒழுங்கு ஆகும்.
பகவான் ஸ்ரீராமசந்திரபெருமான் தனக்கு உரிய ராஜியத்தையே விட்டுக்கொடுத்தான், கிடைத்தபோதும் அவன் மகிழவில்லை, அது கிடைக்காதபோதும் அவன் வருந்தவில்லை. அதுதான் ஸ்ரீராமன் எண்ணம். அதனால்தான் அவர் தெய்வம். அவருக்கு இன்னும் இனியும் ஒருதாசன் உண்டு. ஸ்ரீபக்தன் ஸ்ரீஆஞ்சனேயர்.
ராவணன் தனக்கு உரிமையில்லாத ஒன்றை (சீதையை) திருடிவந்தான், அதை கொடு என்று எத்தனையோ பேர் சொல்லியும் அந்த ஒன்றை திருப்பிக்கொடுக்கவில்லை. அதனால் அவன் மட்டும் இல்லை அவன் குலமே அழிந்தது. அதுதான் ராவணன் எண்ணம்.
எண்ணத்தை அகங்காரம் இல்லாமல் ஒழுங்குப்படுத்துவோம்.
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்
No comments:
Post a Comment