ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி. சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருத்தணிகைமலை முருகபெருமான் திருவடிப்போற்றி
ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ்
251 ஏது புத்தி (திருத்தணிகை)
பொருள் எழுதியது ஸ்ரீ
கோபால சுந்தரம்
தான தத்தன தான
தத்தன
தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன ...... தந்ததான
......... பாடல் .........
ஏது புத்தி ஐயா எனக்கினி
யாரை நத்திடுவேன் அவத்தினிலே
இறத்தல்கொலோ எனக்கு நி ...... தந்தைதாயென்றே
இருக்கவு நானும் இப்படியே
தவித்திடவோ சகத்தவர்
எசலிற் படவோ நகைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்திடை யாதேரித்து எனை
தாளில் வைக்க நியே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா தகப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொழிக் குரல் ஓலமிட்டிடில்
யாரெடுப்பதெனா வெறுத்தழ
பார் விடுப்பர்களோ எனக்கிது ...... சிந்தியாதோ
ஓத முற்றெழு பால் கொதித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே
ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான் மழுக்கர மாட பொற்கழல்
ஓசை பெற்றிடவே நடித்தவர் ...... தந்தவாழ்வே
மாதினைப் புன மீதிருக்கு மை
வாள்விழிக் குறமாதினைத் திரு
மார்பணைத்த மயூர அற்புத ...... கந்தவேளே
மாரன் வெற்றிகொள் பூமுடிக்குழலார்
வியப்புற நீடு மெய்த்தவர்
வாழ் திருத்தணி மாமலைப்பதி ...... தம்பிரானே.
......... சொல் விளக்கம் .........
ஏது புத்தி ஐயா எனக்கு ... எனக்கு புத்தி ஏது ஐயனே?
இனி யாரை நத்திடுவேன் ... இனிமேல் நான் யாரைச் சென்று
விரும்பி நாடுவேன்?
அவத்தினிலே யிறத்தல்கொலோ ... வீணாக இறப்பதுதான் என்
தலைவிதியோ?
எனக்குனி தந்தைதாயென்றே யிருக்கவு ... எனக்கு நீயே தாயும்
தந்தையுமாக இருந்தும்
நானு மிப்படியே தவித்திடவோ ... நான் இந்த விதமாகவே
தவித்திடலாமா?
சகத்தவர் ஏசலிற்படவோ ... உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு நான்
ஆளாகலாமா?
நகைத்தவர் கண்கள் காணப் பாதம் வைத்திடு ஐயா ... என்னை
இகழ்ந்து சிரிப்பவர்களின் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில்
சேர்த்துக்கொள் ஐயனே*,
தெரித்தெனை தாளில் வைக்க நியே மறுத்திடில் ... என் நிலை
தெரிந்தும் என்னை உன் திருவடிகளில் சேர்க்க நீயே மறுப்பாயாகில்,
பார்நகைக்குமையா ... உலகோர் நகைப்பார்கள் ஐயனே,
தகப்பன்முன் மைந்தனோடி ... தந்தையின் முன் குழந்தை
ஓடிச்சென்று,
பால்மொழிக் குரல் ஓலமிட்டிடில் ... பால் மணம் மாறாத வாயால்
குரலெழுப்பி அழுதால்,
யாரெடுப்பதெனா வெறுத்தழ ... இந்தக் குழந்தையை யார்
எடுப்பதென்று வெறுத்து, அழும்படியாக
பார் விடுப்பர்களோ ... இப்பூமியிலே விட்டு விடுவார்களோ?
எனக்கிது சிந்தியாதோ ... எனக்கு இந்த உண்மை சிந்தையிலே
தோன்றலாகாதோ?
ஓத முற்றெழு பால்கொதித்தது போல ... வெள்ளமாய்ப் பெருகி
எழும் பாற்கடல் பொங்கியது போல
எட்டிகை நீசமுட்டரை ... எட்டுத் திசைகளிலும் உள்ள இழிந்த
மூடர்களான அசுரர்களை
ஓட வெட்டிய பாநு சத்திகை யெங்கள்கோவே ... ஓடும்படி
வெட்டியழித்த சூரிய ஒளி கொண்ட சக்திவேலைக் கரத்திலே
கொண்ட எங்கள் அரசனே,
ஓத மொய்ச்சடையாட ... கங்கை வெள்ளம் பெருகும் அடர்ந்த
சடாமுடி ஆடவும்,
உற்றமர் மான்மழுக்கர மாட ... பொருந்தி அமர்ந்த மானும், மழுவும்
ஏந்திய கரங்கள் ஆடவும்,
பொற்கழலோசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே ...
அழகிய கால்களில் கழல் ஒலிசெய்யவும், நடனம் புரிந்த சிவனார்
தந்தளித்த செல்வமே,
மாதினைப்புன மீதிருக்கு ... பெரிய தினைப்புனத்தின் மீது
இருந்தவளும்,
மைவாள்விழிக் குறமாதினை ... மை பூசிய, ஒளி மிகுந்த கண்களை
உடையவளுமான குறப்பெண் வள்ளியை,
திருமார்பணைத்த மயூர அற்புத கந்தவேளே ... உன் அழகிய
மார்புறத் தழுவிய மயில்வாகனனே, அற்புத மூர்த்தியாம்
கந்த வேளே,
மாரன் வெற்றிகொள் பூமுடிக்குழலார் வியப்புற ... மன்மதன்
வெற்றி பெறும்படியான அழகிய பூமுடித்த கூந்தலை உடைய
மாதர்கள் ஆச்சரியப்படும்படியான
நீடு மெய்த்தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே. ...
பெரிய மெய்த்தவசிகள் வாழும் திருத்தணிகை என்ற சிறந்த
மலைத்தலத்தில் வாழும் தம்பிரானே.
* தான் கேட்ட வரத்தின்படியே முருகனின் திருவடி தீட்சையை
அருணகிரிநாதர் அவரது வாழ்வில் பெற்றார்.
தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன ...... தந்ததான
......... பாடல் .........
ஏது புத்தி ஐயா எனக்கினி
யாரை நத்திடுவேன் அவத்தினிலே
இறத்தல்கொலோ எனக்கு நி ...... தந்தைதாயென்றே
இருக்கவு நானும் இப்படியே
தவித்திடவோ சகத்தவர்
எசலிற் படவோ நகைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்திடை யாதேரித்து எனை
தாளில் வைக்க நியே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா தகப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொழிக் குரல் ஓலமிட்டிடில்
யாரெடுப்பதெனா வெறுத்தழ
பார் விடுப்பர்களோ எனக்கிது ...... சிந்தியாதோ
ஓத முற்றெழு பால் கொதித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே
ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான் மழுக்கர மாட பொற்கழல்
ஓசை பெற்றிடவே நடித்தவர் ...... தந்தவாழ்வே
மாதினைப் புன மீதிருக்கு மை
வாள்விழிக் குறமாதினைத் திரு
மார்பணைத்த மயூர அற்புத ...... கந்தவேளே
மாரன் வெற்றிகொள் பூமுடிக்குழலார்
வியப்புற நீடு மெய்த்தவர்
வாழ் திருத்தணி மாமலைப்பதி ...... தம்பிரானே.
......... சொல் விளக்கம் .........
ஏது புத்தி ஐயா எனக்கு ... எனக்கு புத்தி ஏது ஐயனே?
இனி யாரை நத்திடுவேன் ... இனிமேல் நான் யாரைச் சென்று
விரும்பி நாடுவேன்?
அவத்தினிலே யிறத்தல்கொலோ ... வீணாக இறப்பதுதான் என்
தலைவிதியோ?
எனக்குனி தந்தைதாயென்றே யிருக்கவு ... எனக்கு நீயே தாயும்
தந்தையுமாக இருந்தும்
நானு மிப்படியே தவித்திடவோ ... நான் இந்த விதமாகவே
தவித்திடலாமா?
சகத்தவர் ஏசலிற்படவோ ... உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு நான்
ஆளாகலாமா?
நகைத்தவர் கண்கள் காணப் பாதம் வைத்திடு ஐயா ... என்னை
இகழ்ந்து சிரிப்பவர்களின் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில்
சேர்த்துக்கொள் ஐயனே*,
தெரித்தெனை தாளில் வைக்க நியே மறுத்திடில் ... என் நிலை
தெரிந்தும் என்னை உன் திருவடிகளில் சேர்க்க நீயே மறுப்பாயாகில்,
பார்நகைக்குமையா ... உலகோர் நகைப்பார்கள் ஐயனே,
தகப்பன்முன் மைந்தனோடி ... தந்தையின் முன் குழந்தை
ஓடிச்சென்று,
பால்மொழிக் குரல் ஓலமிட்டிடில் ... பால் மணம் மாறாத வாயால்
குரலெழுப்பி அழுதால்,
யாரெடுப்பதெனா வெறுத்தழ ... இந்தக் குழந்தையை யார்
எடுப்பதென்று வெறுத்து, அழும்படியாக
பார் விடுப்பர்களோ ... இப்பூமியிலே விட்டு விடுவார்களோ?
எனக்கிது சிந்தியாதோ ... எனக்கு இந்த உண்மை சிந்தையிலே
தோன்றலாகாதோ?
ஓத முற்றெழு பால்கொதித்தது போல ... வெள்ளமாய்ப் பெருகி
எழும் பாற்கடல் பொங்கியது போல
எட்டிகை நீசமுட்டரை ... எட்டுத் திசைகளிலும் உள்ள இழிந்த
மூடர்களான அசுரர்களை
ஓட வெட்டிய பாநு சத்திகை யெங்கள்கோவே ... ஓடும்படி
வெட்டியழித்த சூரிய ஒளி கொண்ட சக்திவேலைக் கரத்திலே
கொண்ட எங்கள் அரசனே,
ஓத மொய்ச்சடையாட ... கங்கை வெள்ளம் பெருகும் அடர்ந்த
சடாமுடி ஆடவும்,
உற்றமர் மான்மழுக்கர மாட ... பொருந்தி அமர்ந்த மானும், மழுவும்
ஏந்திய கரங்கள் ஆடவும்,
பொற்கழலோசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே ...
அழகிய கால்களில் கழல் ஒலிசெய்யவும், நடனம் புரிந்த சிவனார்
தந்தளித்த செல்வமே,
மாதினைப்புன மீதிருக்கு ... பெரிய தினைப்புனத்தின் மீது
இருந்தவளும்,
மைவாள்விழிக் குறமாதினை ... மை பூசிய, ஒளி மிகுந்த கண்களை
உடையவளுமான குறப்பெண் வள்ளியை,
திருமார்பணைத்த மயூர அற்புத கந்தவேளே ... உன் அழகிய
மார்புறத் தழுவிய மயில்வாகனனே, அற்புத மூர்த்தியாம்
கந்த வேளே,
மாரன் வெற்றிகொள் பூமுடிக்குழலார் வியப்புற ... மன்மதன்
வெற்றி பெறும்படியான அழகிய பூமுடித்த கூந்தலை உடைய
மாதர்கள் ஆச்சரியப்படும்படியான
நீடு மெய்த்தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே. ...
பெரிய மெய்த்தவசிகள் வாழும் திருத்தணிகை என்ற சிறந்த
மலைத்தலத்தில் வாழும் தம்பிரானே.
* தான் கேட்ட வரத்தின்படியே முருகனின் திருவடி தீட்சையை
அருணகிரிநாதர் அவரது வாழ்வில் பெற்றார்.
நன்றி கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0251_u.html
பாடல் பாடியவர். தர்மபுரம் சாமிநாதன். https://www.youtube.com/watch?v=vkF_lqQ2gHo
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்
No comments:
Post a Comment