Wednesday, April 10, 2019

திருப்புகழ் 216 சரண கமலாலயத்தில் (சுவாமிமலை)


ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதர் திருமலடிப்போற்றி போற்றி
முருகா சரணம்
ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய சுவாமிமலை திருப்புகழ்

திருப்புகழ் 216 சரண கமலாலயத்தில்  (சுவாமிமலை)

 பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான

......... பாடல் .........

சரண கமலாலயத்தை அரைநிமிஷ நேரமட்டில்
     தவமுறை தியானம் வைக்க ...... அறியாத

சடகசட மூட மட்டி பவவினையிலே சனித்த
     தமியன் மிடியால் மயக்கம் ...... உறுவேனோ

கருணை புரியாது இருப்ப தெனகுறை யிவேளை செப்பு
     கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே

கடக புயமீது இரத்ந மணியணி பொன்மாலே செச்சை
     கமழுமணமார் கடப்ப ...... மணிவோனே

தருணம் இது ஐயா மிகுத்த கனமதுறு நீள் சவுக்ய
     சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு

தகைமை சிவஞான முத்தி பரகதியு(ம்) நீகொடுத்து
     உதவிபுரிய வேணு(ம்) நெய்த்த ...... வடிவேலா

அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க
     அரியதமிழ் தானளித்த ...... மயில்வீரா

அதிசயம் அநேக முற்ற பழநிமலை மீது உதித்த
     அழக திருவேரகத்தின் ...... முருகோனே.

......... சொல் விளக்கம் .........

சரண கமலாலயத்தில் ... உனது தாமரை போன்ற திருவடிகளில்

அரை நிமிஷ நேர மட்டில் ... அரை நிமிஷ நேர அளவுக்காவது

தவமுறை தியானம் வைக்க அறியாத ... தவ நிலையில் தியானத்தில்
வைத்திட அறியாத

ஜட கசட மூட மட்டி ... பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான
மட்டி யான்

பவ வினையிலே சனித்த ... பிறப்பதே தொழிலாகக் கொண்டு
பிறந்துள்ள

தமியன் ... தன்னம் தனியனான யான்

மடியால் மயக்கம் உறுவேனோ? ... வறுமையால் மயக்கத்தை
அடையலாமோ?

கருணை புரியாதிருப்ப தென குறை ... கருணை காட்டாமல்
இருப்பது என்ன குறையைக் கண்டு?

இவேளை செப்பு ... இப்பொழுதே சொல்லி அருளவேண்டும்

கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே ... கயிலாயமலை நாதராம்
சிவன் பெற்ற குமரனே

கடக புயமீதி ... வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது

ரத்ன மணியணி பொன்மாலை செச்சை ... ரத்னாபரணம்,
தங்கமாலை, வெட்சிப் பூமாலை

கமழு மணமார் கடப்பம் அணிவோனே ... வாசனை நிறைந்த
கடம்பமாலை இவைகளை அணிந்தவனே

தருணம் இதையா ... தக்க சமயம் இதுதான் ஐயா

மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய ... மிக்க பெருமையைத் தரும்
நீடித்த சுகம்

சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு ... எல்லாவித செல்வம்,
அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு

தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து) ...
நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ
கொடுத்(து)

(உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா ... உதவி புரிய
வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே

அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க ... சிவந்த
தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு

அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ... அருமையான் தமிழ்
ஞானத்தை தந்த மயில்வீரனே

அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த ... அதிசயக்
கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும்

அழக, திருவேரகத்தின் முருகோனே. ... அழகனே திருவேரகத்து
(சுவாமி மலையின்) முருகப்பெருமானே.


நன்றி-கௌமாரம்.காம்.http://www.kaumaram.com/thiru/nnt0216_u.html
பாடியவர்-கானக்குயில் அன்னை K.B.சுந்தராம்பாள்
https://www.youtube.com/watch?v=ZH9Q8bVU7mE

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

No comments:

Post a Comment