ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதா போற்றி
முருகா சரணம்
ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 449 கனகசபை மேவும் (சிதம்பரம்)
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ...... தனதானா
......... பாடல் .........
கனகசபை மேவும் எனதுகுரு நாத
கருணை முருகேசப் ...... பெருமாள்காண்
கனகநிற வேதன் அபயமிட மோது
கரகமல சோதிப் ...... பெருமாள்காண்
வினவும் அடியாரை மருவி விளையாடு
விரகுரச மோகப் ...... பெருமாள்காண்
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர்
விமலசர சோதிப் ...... பெருமாள்காண்
சனகி மணவாளன் மருகன் எனவேத
சதமகிழ் குமாரப் ...... பெருமாள்காண்
சரண சிவகாமி யிரணகுல காரி
தருமுருக நாமப் ...... பெருமாள்காண்
இனிது வனமேவும் அமிர்தகுற மாதொடு
இயல்பரவு காதற் ...... பெருமாள்காண்
இணையில் இபதோகை மதியின் மகளோடும்
இயல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
கனகசபை மேவும் ... பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம்
செய்யும்
எனதுகுரு நாத ... எனது குருநாதராகிய
கருணைமுருகேசப் பெருமாள்காண் ... கருணை நிறைந்த
முருகேசப் பெருமாள் நீதான்.
கனகநிற வேதன் ... பொன்னிறத்து பிரமன்
அபயமிட மோது ... அபயம் என்று உன்னைச் சரணடைய,
தலையில் குட்டிய
கரகமல சோதிப் பெருமாள்காண் ... தாமரை போன்ற
கையையுடைய ஜோதிப் பெருமாள் நீதான்.
வினவுமடியாரை மருவிவிளையாடு ... உன்னை ஆய்ந்து துதிக்கும்
அடியார்களிடம் இணைந்து விளையாடுகின்ற
விரகு ரச மோகப் பெருமாள்காண் ... ஆர்வம், இன்பம், ஆசை
அத்தனையும் உள்ள பெருமாள் நீதான்.
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் ... பிரமன், முனிவர்கள்,
தேவர்கள், அருணாசல ஈஸ்வரர்,
விமல சர சோதிப் பெருமாள்காண் ... மற்றும் பரிசுத்தமான என்
மூச்சுக்காற்றில் உள்ள ஜோதிப் பெருமாள் எல்லாமே நீதான்.
சனகிமணவாளன் மருகனென ... ஜானகியின் மணவாளன்
ஸ்ரீராமனின் மருமகன் என்று
வேத சதமகிழ்குமாரப் பெருமாள்காண் ... நூற்றுக்கணக்கான
வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமாள் நீதான்.
சரணசிவ காமி ... அடைக்கலம் அளிக்கும் சிவகாமி,
இரணகுல காரி ... போர் செய்யும் அசுர குலத்தைச் சங்கரித்தவள்,
தருமுருக நாமப் பெருமாள்காண் ... ஈன்றருளிய முருகன்
என்னும் திருநாமம் உடைய பெருமாள் நீதான்.
இனிதுவன மேவும் ... இனிய வள்ளிமலைத் தினைப்புனத்தில் இருந்த
அமிர்தகுற மாதொடு ... அமுதை ஒத்த குறப்பெண் வள்ளியுடன்
இயல்பரவு காதற் பெருமாள்காண் ... அன்பு விரிந்த காதல்
கொண்ட பெருமாள் நீதான்.
இணையில் இப தோகை ... ஒப்பற்ற யானை வளர்த்த மயில் போன்ற
(தேவயானையாம்)
மதியின்மகளோடு ... அறிவு நிறைந்த பெண்ணுடன்
இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே. ... தகுதிபெற்ற புலியூரில்
(சிதம்பரத்தில்) வாழும் அழகிய பெருமாளே.
நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0449_u.html
பாடல் ஒலிவடிவம்-https://www.youtube.com/watch?v=qSaQDs6qfbo
பாடல்-அனீஷ் மேனன்https://www.youtube.com/watch?v=KQsivzZJzTk
தனதனன தானத் ...... தனதானா
......... பாடல் .........
கனகசபை மேவும் எனதுகுரு நாத
கருணை முருகேசப் ...... பெருமாள்காண்
கனகநிற வேதன் அபயமிட மோது
கரகமல சோதிப் ...... பெருமாள்காண்
வினவும் அடியாரை மருவி விளையாடு
விரகுரச மோகப் ...... பெருமாள்காண்
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர்
விமலசர சோதிப் ...... பெருமாள்காண்
சனகி மணவாளன் மருகன் எனவேத
சதமகிழ் குமாரப் ...... பெருமாள்காண்
சரண சிவகாமி யிரணகுல காரி
தருமுருக நாமப் ...... பெருமாள்காண்
இனிது வனமேவும் அமிர்தகுற மாதொடு
இயல்பரவு காதற் ...... பெருமாள்காண்
இணையில் இபதோகை மதியின் மகளோடும்
இயல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
கனகசபை மேவும் ... பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம்
செய்யும்
எனதுகுரு நாத ... எனது குருநாதராகிய
கருணைமுருகேசப் பெருமாள்காண் ... கருணை நிறைந்த
முருகேசப் பெருமாள் நீதான்.
கனகநிற வேதன் ... பொன்னிறத்து பிரமன்
அபயமிட மோது ... அபயம் என்று உன்னைச் சரணடைய,
தலையில் குட்டிய
கரகமல சோதிப் பெருமாள்காண் ... தாமரை போன்ற
கையையுடைய ஜோதிப் பெருமாள் நீதான்.
வினவுமடியாரை மருவிவிளையாடு ... உன்னை ஆய்ந்து துதிக்கும்
அடியார்களிடம் இணைந்து விளையாடுகின்ற
விரகு ரச மோகப் பெருமாள்காண் ... ஆர்வம், இன்பம், ஆசை
அத்தனையும் உள்ள பெருமாள் நீதான்.
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் ... பிரமன், முனிவர்கள்,
தேவர்கள், அருணாசல ஈஸ்வரர்,
விமல சர சோதிப் பெருமாள்காண் ... மற்றும் பரிசுத்தமான என்
மூச்சுக்காற்றில் உள்ள ஜோதிப் பெருமாள் எல்லாமே நீதான்.
சனகிமணவாளன் மருகனென ... ஜானகியின் மணவாளன்
ஸ்ரீராமனின் மருமகன் என்று
வேத சதமகிழ்குமாரப் பெருமாள்காண் ... நூற்றுக்கணக்கான
வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமாள் நீதான்.
சரணசிவ காமி ... அடைக்கலம் அளிக்கும் சிவகாமி,
இரணகுல காரி ... போர் செய்யும் அசுர குலத்தைச் சங்கரித்தவள்,
தருமுருக நாமப் பெருமாள்காண் ... ஈன்றருளிய முருகன்
என்னும் திருநாமம் உடைய பெருமாள் நீதான்.
இனிதுவன மேவும் ... இனிய வள்ளிமலைத் தினைப்புனத்தில் இருந்த
அமிர்தகுற மாதொடு ... அமுதை ஒத்த குறப்பெண் வள்ளியுடன்
இயல்பரவு காதற் பெருமாள்காண் ... அன்பு விரிந்த காதல்
கொண்ட பெருமாள் நீதான்.
இணையில் இப தோகை ... ஒப்பற்ற யானை வளர்த்த மயில் போன்ற
(தேவயானையாம்)
மதியின்மகளோடு ... அறிவு நிறைந்த பெண்ணுடன்
இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே. ... தகுதிபெற்ற புலியூரில்
(சிதம்பரத்தில்) வாழும் அழகிய பெருமாளே.
நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0449_u.html
பாடல் ஒலிவடிவம்-https://www.youtube.com/watch?v=qSaQDs6qfbo
பாடல்-அனீஷ் மேனன்https://www.youtube.com/watch?v=KQsivzZJzTk
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்
No comments:
Post a Comment