ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதா போற்றி
கைலைமலையானே போற்றி
அம்மையப்பா போற்றி
ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ்
518 தேனுந்து முக்கனிகள் (கயிலைமலை)
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்
தானந் தனத்ததன
தானந் தனத்ததன
தானந் தனத்ததன ...... தனதான
......... பாடல் .........
தேனுந்து முக்கனிகள் பால்செங்கருப்பு இளநிர்
சீரும் பழித்த சிவம் ...... அருளூறத்
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
சீவன் சிவச்சொருப மென...... தேறி
நானென்பது அற்று உயிரொடு ஊனென்பதற்று வெளி
நாதம் பரப்பிரம ...... வொளிமீதே
ஞானஞ் சுரப்ப மகிழாநந்த சித்தியொடெ
நாளுங் களிக்க பதம் ...... அருள்வாயே
வானந்தழைக்க அடியேனுஞ் செழிக்கஅயன்
மாலும் பிழைக்க அலைவிட ...... மாள
வாருங் கரத்தன் எமையாளுந் தகப்பன் மழு
மானின் கரத்தன் அருள் ...... முருகோனே
தானந் தனத் ததனனா வண்டு சுற்றி மது
தானுண் கடப்பமலரணி ...... மார்பா
தானங் குறித்து எமையாளுந் திருக்கயிலை
சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
தேன் உந்து முக்கனிகள் ... நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா,
பலா, வாழை)
பால்செங் கருப்பிளனிர் ... பால், சிவந்த கரும்பு, இள நீர்
சீரும் ... இவைகளின் இனிப்பின் சிறப்பையும்
பழித்த ... (தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்)
தாழ்மைப்படுத்துகின்ற
சிவம் அருள் ஊற ... மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப்
பெருகவும்,
தீதும் பிடித்தவினை யேதும் ... தீவினை, நல்வினை முழுவதும்
பொடித்துவிழு ... தூள்பட்டு ஒழியவும்,
சீவன் சிவச்சொருபம் ... இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது
என தேறி ... என்று நன்கு தெளிந்து,
நானென்ப தற்று ... அகங்காரத்தை அடியோடு நீத்தும்,
உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று ... உயிர்ப்பற்று, உடற்பற்று
இரண்டையும் அகற்றியும்,
வெளிநாதம் பரப்பிரம ... (சிதாகாசம் என்ற) பரவெளியில் உள்ள
அருள்நாதப் பிரம்மமாம்
ஒளிமீதே ... பரஞ்ஜோதியில்
ஞானம் சுரப்ப ... சிவ ஞானம் பெருகிவரவும்,
மகிழ் ஆனந்த சித்தியொடு ... மகிழ்ச்சி ஊறும் சிவானந்த
மோட்சத்தில்,
எநாளும் களிக்க ... அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு
பதம் அருள்வாயே ... நின் திருவடியைத் தந்தருள்வாயாக
வானம் தழைக்க ... விண்ணுலகு தழைத்து ஓங்கும் பொருட்டும்,
அடியேனும் செழிக்க ... அடியேனும் சிவநலம் பெற்று உய்வதன்
பொருட்டும்,
அயன் மாலும் பிழைக்க ... பிரம்மாவும், திருமாலும் (சூரனால்
அழியாது) வாழும் பொருட்டும்,
அலை விட(ம்) மாள ... பாற்கடலில் தோன்றிய விஷத்தின் வலிமை
அழிய
வாருங் கரத்தன் ... (அவ்விஷத்தை) குடிக்க வாரி எடுத்த கரத்தை
உடையவரும்,
எமை யாளும் தகப்பன் ... எங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும்,
மழு மானின் கரத்தன் ... நெருப்பையும், மானையும் ஏந்திய
திருக்கரத்தை உடையவருமான சிவபெருமான்
அருள் முருகோனே ... பெற்றருளிய முருகக் கடவுளே
தானந் தனத்ததனனா ... தானந் தனத்ததனனா என்ற
ரீங்காரத்துடன்
வண்டு சுற்றி ... வண்டானது வட்டமிட்டு
மது தானுண் ... தேனை உண்ணுகின்ற
கடப்பமலர் ... கடப்ப மலரை
அணிமார்பா ... தரித்துக் கொள்கிற திருமார்பை உடையவனே
தானங் குறித்து ... (எமைக் காப்பதற்கு) தக்க இடமாகக் குறித்து
எமை யாளும் ... எங்களை ஆட்கொள்ளவென்றே
திருக்கயிலை சாலும் ... திருக்கயிலாய மலைமேல் எழுந்தருளிய,
குறத்திமகிழ் பெருமாளே. ... வள்ளிநாயகி மகிழ்கின்ற பெருமாளே.
தானந் தனத்ததன ...... தனதான
......... பாடல் .........
தேனுந்து முக்கனிகள் பால்செங்கருப்பு இளநிர்
சீரும் பழித்த சிவம் ...... அருளூறத்
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
சீவன் சிவச்சொருப மென...... தேறி
நானென்பது அற்று உயிரொடு ஊனென்பதற்று வெளி
நாதம் பரப்பிரம ...... வொளிமீதே
ஞானஞ் சுரப்ப மகிழாநந்த சித்தியொடெ
நாளுங் களிக்க பதம் ...... அருள்வாயே
வானந்தழைக்க அடியேனுஞ் செழிக்கஅயன்
மாலும் பிழைக்க அலைவிட ...... மாள
வாருங் கரத்தன் எமையாளுந் தகப்பன் மழு
மானின் கரத்தன் அருள் ...... முருகோனே
தானந் தனத் ததனனா வண்டு சுற்றி மது
தானுண் கடப்பமலரணி ...... மார்பா
தானங் குறித்து எமையாளுந் திருக்கயிலை
சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
தேன் உந்து முக்கனிகள் ... நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா,
பலா, வாழை)
பால்செங் கருப்பிளனிர் ... பால், சிவந்த கரும்பு, இள நீர்
சீரும் ... இவைகளின் இனிப்பின் சிறப்பையும்
பழித்த ... (தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்)
தாழ்மைப்படுத்துகின்ற
சிவம் அருள் ஊற ... மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப்
பெருகவும்,
தீதும் பிடித்தவினை யேதும் ... தீவினை, நல்வினை முழுவதும்
பொடித்துவிழு ... தூள்பட்டு ஒழியவும்,
சீவன் சிவச்சொருபம் ... இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது
என தேறி ... என்று நன்கு தெளிந்து,
நானென்ப தற்று ... அகங்காரத்தை அடியோடு நீத்தும்,
உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று ... உயிர்ப்பற்று, உடற்பற்று
இரண்டையும் அகற்றியும்,
வெளிநாதம் பரப்பிரம ... (சிதாகாசம் என்ற) பரவெளியில் உள்ள
அருள்நாதப் பிரம்மமாம்
ஒளிமீதே ... பரஞ்ஜோதியில்
ஞானம் சுரப்ப ... சிவ ஞானம் பெருகிவரவும்,
மகிழ் ஆனந்த சித்தியொடு ... மகிழ்ச்சி ஊறும் சிவானந்த
மோட்சத்தில்,
எநாளும் களிக்க ... அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு
பதம் அருள்வாயே ... நின் திருவடியைத் தந்தருள்வாயாக
வானம் தழைக்க ... விண்ணுலகு தழைத்து ஓங்கும் பொருட்டும்,
அடியேனும் செழிக்க ... அடியேனும் சிவநலம் பெற்று உய்வதன்
பொருட்டும்,
அயன் மாலும் பிழைக்க ... பிரம்மாவும், திருமாலும் (சூரனால்
அழியாது) வாழும் பொருட்டும்,
அலை விட(ம்) மாள ... பாற்கடலில் தோன்றிய விஷத்தின் வலிமை
அழிய
வாருங் கரத்தன் ... (அவ்விஷத்தை) குடிக்க வாரி எடுத்த கரத்தை
உடையவரும்,
எமை யாளும் தகப்பன் ... எங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும்,
மழு மானின் கரத்தன் ... நெருப்பையும், மானையும் ஏந்திய
திருக்கரத்தை உடையவருமான சிவபெருமான்
அருள் முருகோனே ... பெற்றருளிய முருகக் கடவுளே
தானந் தனத்ததனனா ... தானந் தனத்ததனனா என்ற
ரீங்காரத்துடன்
வண்டு சுற்றி ... வண்டானது வட்டமிட்டு
மது தானுண் ... தேனை உண்ணுகின்ற
கடப்பமலர் ... கடப்ப மலரை
அணிமார்பா ... தரித்துக் கொள்கிற திருமார்பை உடையவனே
தானங் குறித்து ... (எமைக் காப்பதற்கு) தக்க இடமாகக் குறித்து
எமை யாளும் ... எங்களை ஆட்கொள்ளவென்றே
திருக்கயிலை சாலும் ... திருக்கயிலாய மலைமேல் எழுந்தருளிய,
குறத்திமகிழ் பெருமாளே. ... வள்ளிநாயகி மகிழ்கின்ற பெருமாளே.
நன்றி. கௌமாரம்.காம்.
http://www.kaumaram.com/thiru/nnt0518_u.html
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்
No comments:
Post a Comment