ஓம் முருகன் துணை
குருநாதா போற்றி
சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருப்பரங்குன்றம்
தேவாசேனாபதி போற்றி
ஸ்ரீஅருணகிரிநாதர்
சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ்
13 சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்)
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்
தந்தனந் தந்தத்
...... தனதான
தந்தனந்
தந்தத் ...... தனதான
......... பாடல்
.........
சந்ததம் பந்தத்
...... தொடராலே
சஞ்சலந்
துஞ்சித் ...... திரியாதே
கந்தனென்று என்று உற்று
...... உனைநாளும்
கண்டுகொண்டு
அன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப்
...... புணர்வோனே
சங்கரன்
பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக்
...... கதிர்வேலா
தென்பரங்
குன்றிற் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம்
.........
சந்ததம் பந்தத் தொடராலே ... எப்பொழுதும் பாசம் என்ற
தொடர்பினாலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே ... துயரத்தால் சோர்ந்து திரியாமல்,
கந்தனென்று என்று உற்று உனைநாளும் ... கந்தன் என அடிக்கடி
மனதார உன்னை தினமும்
கண்டுகொண்டு ... உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து,
அன்புற்றிடுவேனோ ... யான்அன்பு கொள்வேனோ?
தந்தியின் கொம்பை ... (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி
போன்ற தேவயானையை
புணர்வோனே ... மணம் செய்துகொண்டு சேர்பவனே,
சங்கரன் பங்கிற் சிவைபாலா ... சங்கரனின் பக்கத்தில் தங்கிய
பார்வதியின் குழந்தாய்,
செந்திலங் கண்டிக் கதிர்வேலா ... திருச்செந்தூரிலும், அழகிய
கண்டியிலும் ஒளிவீசும்
வேலோடு விளங்குபவனே,
தென்பரங் குன்றிற் பெருமாளே. ... அழகிய திருப்பரங்குன்றில்
அமர்ந்த பெருமாளே.
நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0013_u.html
பாடியவர்.சுதா ரகுநாதன் https://www.youtube.com/watch?v=PqIFgT0gNsE
Youtubeபக்கம் kalpaka kamakshi-https://www.youtube.com/watch?v=EWPds8Y_L9I
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்
No comments:
Post a Comment