ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாத போற்றி
யசோதை இளம்சிங்கம் ஸ்ரீகண்ணபெருமான் திருமருகா போற்றி
ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 5 விடமடைசு வேலை (விநாயகர்)
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்
தனதனன தான தனதனன
தான
தனதனன தான ...... தனதான
......... பாடல் .........
விடம் அடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாணம் ...... எனவேதான்
விழியும் அதிபார விதமும் உடை மாதர்
வினையின் விளைவேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகல் இரவெனாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவன் அறிவீனன் இவனும் உயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர் சிறுபாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியென நாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவ அடிகூர
அசலும் அறியாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவு முடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.
......... சொல் விளக்கம் .........
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் ... நஞ்சு பொருந்திய
கடலும், தேவர் படையும், சூலாயுதமும்,
விசையன் விடு பாணம் எனவே தான் ... அருச்சுனன் விடுகின்ற
அம்பும் சமானம் என்று கூறும்படியான
விழியும் அதி பார விதமும் உடை மாதர் ... கண்களும்,
அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின்
வினையின் விளைவு ஏதும் அறியாதே ... சாகசத் தொழில்களினால்
விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது,
கடி உலவு பாயல் பகல் இரவு எனாது ... வாசனை மிக்க
படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல்
கலவி தனில் மூழ்கி வறிதாய கயவன் அறிவு ஈனன் ...
சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும்
ஆகிய
இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே ...
அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள்
புரிவாயாக.
இறைவன் மகள் வாய்மை அறியாதே ... அரசன் உக்ரசேனனுடைய
மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக
(அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப்
படுவார்கள் என்ற உண்மை தெரியாது)
இதயம் மிக வாடி உடைய பி(ள்)ளை நாத எனு நாமம் முறை
கூற ... மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப்
பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற
(அவள் முறையீட்டுக்கு இரங்கி),
இடையர் சிறு பாலை திருடி கொ(ண்)டு போக ...
(அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத்
திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக்
கண்ணன் தன்வசமாக்க),
அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர்
ஓட ... பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ
வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட,
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட ... போவது ஏனடா
சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும்
அறிவு அருளும் ஆனை முகவோனே. ... அறிவை
(கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே.
தனதனன தான ...... தனதான
......... பாடல் .........
விடம் அடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாணம் ...... எனவேதான்
விழியும் அதிபார விதமும் உடை மாதர்
வினையின் விளைவேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகல் இரவெனாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவன் அறிவீனன் இவனும் உயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர் சிறுபாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியென நாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவ அடிகூர
அசலும் அறியாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவு முடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.
......... சொல் விளக்கம் .........
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் ... நஞ்சு பொருந்திய
கடலும், தேவர் படையும், சூலாயுதமும்,
விசையன் விடு பாணம் எனவே தான் ... அருச்சுனன் விடுகின்ற
அம்பும் சமானம் என்று கூறும்படியான
விழியும் அதி பார விதமும் உடை மாதர் ... கண்களும்,
அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின்
வினையின் விளைவு ஏதும் அறியாதே ... சாகசத் தொழில்களினால்
விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது,
கடி உலவு பாயல் பகல் இரவு எனாது ... வாசனை மிக்க
படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல்
கலவி தனில் மூழ்கி வறிதாய கயவன் அறிவு ஈனன் ...
சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும்
ஆகிய
இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே ...
அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள்
புரிவாயாக.
இறைவன் மகள் வாய்மை அறியாதே ... அரசன் உக்ரசேனனுடைய
மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக
(அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப்
படுவார்கள் என்ற உண்மை தெரியாது)
இதயம் மிக வாடி உடைய பி(ள்)ளை நாத எனு நாமம் முறை
கூற ... மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப்
பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற
(அவள் முறையீட்டுக்கு இரங்கி),
இடையர் சிறு பாலை திருடி கொ(ண்)டு போக ...
(அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத்
திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக்
கண்ணன் தன்வசமாக்க),
அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர்
ஓட ... பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ
வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட,
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட ... போவது ஏனடா
சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும்
அறிவு அருளும் ஆனை முகவோனே. ... அறிவை
(கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே.
நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0005_u.html
அடியேன் குரலில் திருப்புகழ்-https://www.youtube.com/watch?v=hTgEZOg9n-I&list=UUvSbTvTGd7X63HCxCAT3hAA&index=14
அடியேன் குரலில் திருப்புகழ்-https://www.youtube.com/watch?v=hTgEZOg9n-I&list=UUvSbTvTGd7X63HCxCAT3hAA&index=14
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்
No comments:
Post a Comment