ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதா போற்றி
ஸ்ரீசிறுவாபுரி முருகா போற்றி
ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 724 அண்டர்பதி குடியேற (சிறுவை)
பொருள்
எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்
தந்ததன தனதான தந்ததன
தனதான
தந்ததன தனதான ...... தனதான
......... பாடல் .........
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... அருளாலே
அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரும் எண்டிசையில் உளபேரு
மஞ்சினனும் அயனாரும் ...... எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்துமயிலுடன் ஆடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை அறிவாள ...... உயர்தோளா
பொங்குகடலுடன் நாகம் விண்டு வரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்தரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்தமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
அண்டர்பதி குடியேற ... தேவேந்திரன் மீண்டும் தேவலோகத்தில்
குடிபுகச்செய்து,
மண்டசுரர் உருமாற ... நெருங்கி வந்த அசுரர்களின் உருமாறி
அவர்களை மடியச்செய்து,
அண்டர்மன மகிழ்மீற அருளாலே ... தேவர்களின் மனம் மிகக்
களிப்படையும்படி அருள்செய்து,
அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர ... காளியுடன்
நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய,
ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக ... விநாயகனும், உமாதேவியும்
மிகக் களிப்படைய,
மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு ... பூமியில்
உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும்,
மஞ்சினனும் அயனாரும் எதிர்காண ... இந்திரனும், பிரமனும்
எதிரே நின்று கண்டு களிக்க,
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற ... லக்ஷ்மியுடன்
திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற,
மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் ... வலிமையான மயிலுடன்
ஆடி என்முன் நீ வரவேண்டும்.
புண்டரிக விழியாள ... தாமரை போன்ற கண்களை உடையவனே,
அண்டர்மகள் மணவாளா ... தேவர்கள் வளர்த்த மகள்
தேவயானையின் மணவாளனே,
புந்திநிறை யறிவாள வுயர்தோளா ... அறிவு நிறைந்த
மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே,
பொங்குகடலுடன் நாகம் விண்டு ... பொங்கிய கடலுடன்,
கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து
வரை யிகல்சாடு ... ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா ... பொன்னொளி பரப்பிச் சுடர்
வீசும் கூரிய வேலாயுதனே,
தண் தரள மணிமார்ப ... குளிர்ந்த முத்துமாலையை அணிந்த
மார்பனே,
செம்பொனெழில் செறிரூப ... செம்பொன்னின் அழகு நிறைந்த
உருவத்தோனே,
தண்டமிழின் மிகுநேய முருகேசா ... நல்ல தமிழில் மிகுந்த நேசம்
கொண்ட முருகேசப் பெருமானே,
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான ... எப்போதும் உன்
அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே. ... குளிர்ந்த சிறுவைத்
தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.
தந்ததன தனதான ...... தனதான
......... பாடல் .........
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... அருளாலே
அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரும் எண்டிசையில் உளபேரு
மஞ்சினனும் அயனாரும் ...... எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்துமயிலுடன் ஆடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை அறிவாள ...... உயர்தோளா
பொங்குகடலுடன் நாகம் விண்டு வரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்தரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்தமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
அண்டர்பதி குடியேற ... தேவேந்திரன் மீண்டும் தேவலோகத்தில்
குடிபுகச்செய்து,
மண்டசுரர் உருமாற ... நெருங்கி வந்த அசுரர்களின் உருமாறி
அவர்களை மடியச்செய்து,
அண்டர்மன மகிழ்மீற அருளாலே ... தேவர்களின் மனம் மிகக்
களிப்படையும்படி அருள்செய்து,
அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர ... காளியுடன்
நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய,
ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக ... விநாயகனும், உமாதேவியும்
மிகக் களிப்படைய,
மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு ... பூமியில்
உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும்,
மஞ்சினனும் அயனாரும் எதிர்காண ... இந்திரனும், பிரமனும்
எதிரே நின்று கண்டு களிக்க,
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற ... லக்ஷ்மியுடன்
திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற,
மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் ... வலிமையான மயிலுடன்
ஆடி என்முன் நீ வரவேண்டும்.
புண்டரிக விழியாள ... தாமரை போன்ற கண்களை உடையவனே,
அண்டர்மகள் மணவாளா ... தேவர்கள் வளர்த்த மகள்
தேவயானையின் மணவாளனே,
புந்திநிறை யறிவாள வுயர்தோளா ... அறிவு நிறைந்த
மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே,
பொங்குகடலுடன் நாகம் விண்டு ... பொங்கிய கடலுடன்,
கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து
வரை யிகல்சாடு ... ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா ... பொன்னொளி பரப்பிச் சுடர்
வீசும் கூரிய வேலாயுதனே,
தண் தரள மணிமார்ப ... குளிர்ந்த முத்துமாலையை அணிந்த
மார்பனே,
செம்பொனெழில் செறிரூப ... செம்பொன்னின் அழகு நிறைந்த
உருவத்தோனே,
தண்டமிழின் மிகுநேய முருகேசா ... நல்ல தமிழில் மிகுந்த நேசம்
கொண்ட முருகேசப் பெருமானே,
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான ... எப்போதும் உன்
அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே. ... குளிர்ந்த சிறுவைத்
தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* சிறுவைத்தலம்
சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே
7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'. 'லவ - குசர்' ஆகிய
சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'. 'லவ - குசர்' ஆகிய
சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0724_u.html
சிறுவாபுரி முருகன்கோயில் கட்டுரை-http://tamil.webdunia.com/article/special-astro-predictions/own-home-blessing-give-siruvapuri-murugan-temple-118060200031_1.html
ஆனந்தவிடகன். https://www.vikatan.com/news/spirituality/77741-siruvapuri-murugan-can-fulfill-your-dream-house.html
திருப்புகழ் ஒலிவடிவம்-சுதா ரகுநாதன். https://www.youtube.com/watch?v=GuryJX8CWR0
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்.
No comments:
Post a Comment