ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதாபோற்றி
இரத்தினகிரி முருகா போற்றி
ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 567 பத்தியால் யானுனை (இரத்னகிரி)
பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்
தத்தனா தானனத்
...... தனதான
தத்தனா தானனத் ...... தனதான
......... பாடல் .........
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனாம் ஆறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கு ...... அருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றி வேலாயுதப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பத்தியால் யானுனை ... அன்பினால் உன்னை உறுதியாக
பலகாலும் பற்றியே ... பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு
மாதிருப்புகழ் பாடி ... உயர்ந்த திருப்புகழைப் பாடி
முத்தனாம் ஆறெனை ... ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை
பெருவாழ்வின் முத்தியே ... இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை
சேர்வதற்கு அருள்வாயே ... சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக
உத்தமா... உத்தம குணங்களை உடையவரே
தத்தனா தானனத் ...... தனதான
......... பாடல் .........
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனாம் ஆறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கு ...... அருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றி வேலாயுதப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பத்தியால் யானுனை ... அன்பினால் உன்னை உறுதியாக
பலகாலும் பற்றியே ... பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு
மாதிருப்புகழ் பாடி ... உயர்ந்த திருப்புகழைப் பாடி
முத்தனாம் ஆறெனை ... ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை
பெருவாழ்வின் முத்தியே ... இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை
சேர்வதற்கு அருள்வாயே ... சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக
உத்தமா... உத்தம குணங்களை உடையவரே
தான சற் குணர்நேயா ... தானம் வழங்ககூடிய நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே
ஒப்பிலா மா ... சமானம் இல்லாத பெருமை பொருந்திய
மணிக்கிரிவாசா ... ரத்னகிரியில் வாழ்பவனே*
வித்தகா ... பேரறிவாளனே
ஞானசத்தி நிபாதா ... திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே
வெற்றிவே லாயுதப் பெருமாளே. ... வெற்றியைத் தரும் வேலை
ஆயுதமாகக் கொண்ட பெருமாளே.
* ரத்னாசலம், சிவாயம், மணிக்கிரி என்பன வாட்போக்கித் தலமாகிய
ரத்தினகிரியின் பிற பெயர்கள். தேவாரம் பெற்ற திருத்தலம். திருச்சி மாவட்டம்
குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.
நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0567_u.html
பாடல் ஒலி அமுதம். கே.ஜே.ஏசுதாஸ். https://www.youtube.com/watch?v=XmBJtj7UuSE&t=1s
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்
No comments:
Post a Comment