ஓம் முருகன் துணை
சுவாமிமலை சாமிநாதா போற்றி
ஸ்ரீகயிலாமலைகுமரா போற்றி
ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ்
521 புமி அதனில் (கயிலைமலை)
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்
தனதனனத்
...... தனதான
தனதனனத் ...... தனதான
......... பாடல் .........
புமியதனிற் ......ப்ரபுவான
புகலியில் வித்தகர் ...... போல
அமிர்த கவித் ...... தொடைபாட
அடிமை தனக்கு ...... அருள்வாயே
சமரில் எதிர்த்த ...... சுர்மாளத்
தனியயில் விட்டு ...... அருள்வோனே
நமசிவயப் ...... பொருளானே
ரசதகிரிப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
புமியதனிற் ப்ரபுவான ... இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும்
தலைவரும்,
புகலியில்* வித்தகர்போல ... சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான
திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல
அமிர்தகவித் தொடைபாட ... இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத்
தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு
அடிமைதனக்கு அருள்வாயே ... இந்த அடிமைக்கும் திருவருள்
புரிவாயாக.
சமரிலெதிர்த்த சுர் மாள ... போரில் எதிர்த்து வந்த சூரன்
மாண்டொழிய
தனியயில்விட்டு அருள்வோனே ... ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி
அருளியவனே,
நமசிவயப் பொருளானே ... நமசிவய என்ற ஐந்தெழுத்தின்
தத்துவமாகியவனே,
ரசதகிரிப் பெருமாளே. ... வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள
பெருமாளே.
தனதனனத் ...... தனதான
......... பாடல் .........
புமியதனிற் ......ப்ரபுவான
புகலியில் வித்தகர் ...... போல
அமிர்த கவித் ...... தொடைபாட
அடிமை தனக்கு ...... அருள்வாயே
சமரில் எதிர்த்த ...... சுர்மாளத்
தனியயில் விட்டு ...... அருள்வோனே
நமசிவயப் ...... பொருளானே
ரசதகிரிப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
புமியதனிற் ப்ரபுவான ... இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும்
தலைவரும்,
புகலியில்* வித்தகர்போல ... சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான
திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல
அமிர்தகவித் தொடைபாட ... இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத்
தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு
அடிமைதனக்கு அருள்வாயே ... இந்த அடிமைக்கும் திருவருள்
புரிவாயாக.
சமரிலெதிர்த்த சுர் மாள ... போரில் எதிர்த்து வந்த சூரன்
மாண்டொழிய
தனியயில்விட்டு அருள்வோனே ... ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி
அருளியவனே,
நமசிவயப் பொருளானே ... நமசிவய என்ற ஐந்தெழுத்தின்
தத்துவமாகியவனே,
ரசதகிரிப் பெருமாளே. ... வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள
பெருமாளே.
* புகலி = சீர்காழி:
உலகமே அழியினும் அழியாத தலமாகிய சீர்காழிதான் தேவர்களுக்கும் புகலிடம் என்பதால்
புகலி என்ற பெயர் பெற்றது.
உலகமே அழியினும் அழியாத தலமாகிய சீர்காழிதான் தேவர்களுக்கும் புகலிடம் என்பதால்
புகலி என்ற பெயர் பெற்றது.
நன்றி. கௌமாரம். காம். http://www.kaumaram.com/thiru/nnt0521_u.html
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்
No comments:
Post a Comment