ஓம் முருகன் துணை
குருநாதா சுவாமிமலை சாமிநாதா
போற்றி
ஸ்ரீஅருணகிரிநாதர்
சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ்
212 காமியத் தழுந்தி (சுவாமிமலை)
பொருள்
எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்
தானனத்
தனந்த ...... தனதான
தானனத்
தனந்த ...... தனதான
......... பாடல்
.........
காமியத்து அழுந்தி ...... யிளையாதே
காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத்தில்
அன்பு ...... மிகவூறி
ஓவியத்தில் அந்தம் ...... அருள்வாயே
தூமமெய்க்கு அணிந்த ...... சுகலீலா
சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற்பு உயர்ந்த ...... மயில்வீரா
ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
......... சொல் விளக்கம்
.........
காமியத் தழுந்தி ... ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு
யிளையாதே ... மெலிந்து போகாமல்,
காலர்கைப் படிந்து ... யம தூதர்களின் கைகளிற் சிக்கி
மடியாதே ... இறந்து போகாமல்,
ஓமெழுத்தி லன்பு ... ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு
மிகவூறி ... மிகவும் ஏற்பட்டு,
ஓவியத்தி லந்தம் ... யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை
(அடைய)
அருள்வாயே ... அருள்வாயாக.
தூமமெய்க் கணிந்த ... வாசனைப் புகையை மேனியில் அணிந்துள்ள
சுகலீலா ... சுகமான லீலைகளைப் புரியும் பெருமானே,
சூரனைக் கடிந்த கதிர்வேலா ... சூர சம்ஹாரம் செய்த ஒளி வேலனே,
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா ... பொன்மலையைப் போலச் சிறந்த
மயிலில் ஏறும் வீரனே,
ஏரகத் தமர்ந்த பெருமாளே. ... திருவேரகம் என்ற சுவாமிமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
நன்றி.
கௌமாரம்.காம்- http://www.kaumaram.com/thiru/nnt0212_u.html
வெற்றிவேல்
முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா
சரணம்
No comments:
Post a Comment